info@ncefw.in +91 75502 10918

Nazareth is for Truth, Joy and Peace

துறை வரலாறு :

நாசரேத் மகளிர் கல்வியியல் கல்லூரியில் செயல்பட்டுவரும் எட்டு துறைகளுள் தமிழ்த் துறையும் ஒன்று. இத்தமிழ்த் துறையானது கல்லூரி தொடங்கப்பட்ட 2006-ஆம் ஆண்டு முதல் செம்மையாக செயல்பட்டு ஆண்டுதோறும் தமிழாசிரியைகளை உருவாக்கும் பணியில் செவ்வனே ஈடுபட்டு வருகின்றது.

 

தொலைநோக்குத் திட்டம்:

மாணவ ஆசிரியர்களின் கற்றல் அடைவினையும், கற்பித்தல் திறனையும் மேம்படுத்தி உலகளாவிய வகையில் ஒருங்கிணைந்த வளர்ச்சியினை ஏற்படுத்துதல்.

 

பணித்திட்டம்:

கல்வியின் தரத்தினை மேம்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு தேவையான கற்றல் மூலங்களையும், அதற்கான வழிமுறைகளையும் அளித்து தலைமைப்பண்பு, முழுமையான ஆளுமையை வளர்த்தல்.

 

துறைசார் கலைத்திட்டம்:

தமிழ்த்துறையில் தாள்-ஒன்று மற்றும் தாள்-

அவற்றுள் இரண்டு (Optional I, II) இணைந்து மொத்தம் இருபது அலகுகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க அலகுகள் பின்வருமாறு:

  • மொழியின் அடிப்படைத்திறன்கள் பேசுதல், கேட்டல், படித்தல், எழுதுதல்
  • நுண்ணிலை கற்பித்தல் மற்றும் அதன் திறன்கள்
  • கற்பிக்கும் வழிமுறைகள்
  • பாடத்திட்டம் எழுதும் முறை
  • வகுப்பறை கற்பித்தல் மற்றும் மாணவர்களின் கற்றல் அடைவினை கண்டறியும் மதிப்பீட்டு முறையும்
  • ஒலிகளின் பிறப்பு
  • மொழியின் பல்வேறு வளர்ச்சி நிலைகள்

துறைசார் தகவல்கள்:

மாணவ ஆசிரியர்கள் பல்வேறு விதமான பாட சார் செயல்களிலும், பாட இணை செயல்களிலும் ஈடுபட்டு தங்களின் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.

 

பாடம்சார் செயல்கள்:

  • கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நுண்ணிலைக் கற்பித்தலில் பல்வேறு திறன்களைக் கற்பித்தல்.
  • அதனைத் தொடர்ந்து துறைசார் பேராசிரியர்களால் கற்பிக்கும் முறை பற்றி ஒரு மாதிரி பாடம், துணைக் கருவிகளின் உதவியுடன் நடத்திக் காண்பித்தல்.
  • அதனை மையமாகக் கொண்டும், நுண்ணிலைக் கற்பித்தலின் பல்வேறு திறன்களைக் கொண்டும் மாணவ ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தலை மேற்கொள்ளுதல்.
  • மேற்கண்ட பயிற்சிக்குப் பின்னர் மாணவர்கள் அருகாமையில் இருக்கும் பள்ளிகளுக்கு கற்பித்தல் பயிற்சிக்கு அனுப்பப்படுதல்.
  • பின்பு பள்ளிகளில் தங்கள் கற்பித்தலின் கற்றல் அடைவினை சோதிக்க அடைவுத் தேர்வு நடத்தப்பட்டு, மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களின் கற்றல் அடைவு, புள்ளியியல் முறையில் மதிப்பீடு செய்தல்.
  • மீத்திறன் குறைந்த மாணவர்களுக்கு பயன்படும் வகையில் திட்டமிட்டுக் கற்றல் சட்டம் (PLM) மாணவர்களால் தயாரிக்கப்படுதல்.
  • மேலும் பள்ளிகளில் தாங்கள் கற்பிக்க பயன்படுத்திய பாட நூல் பற்றிய ஆய்வினை மேற்கொள்ளுதல்.

 

பாட இணை செயல்கள் கற்பித்தல் பொருட்கள் கண்காட்சி :

வருடந்தோறும் செயல்முறைத் தேர்வின் இறுதியில் மாணவ  ஆசிரியர்களின் மாதிரிகள், சுழலட்டைகள், ளக்க அட்டைகள், மின்னலட்டைகள், வரைபடம், விளக்கப்படம், அறிக்கைகள் அனைத்தும் பள்ளி மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

 

துறைசார், வண்ணதினக் கொண்டாட்டம்:

இதில் துறைசார்ந்த பல்வேறு தகவல்களையும்,   கொடுக்கப்பட்ட வண்ணம் தொடர்பான பல்வேறு தகவல்களையும் மாணவ ஆசிரியர்கள், குறுநாடகம், நடனம், விளையாட்டுகள், விளம்பரங்கள், பாடல்கள் மூலம் அளிப்பார்கள்.

 

சமூகப்பயனுள்ள ஆக்கப்பணிகள்: (SUPW)

மேலும் மாணவ ஆசிரியர்கள், சமூகப் பயனுள்ள ஆக்கச் செயல்களில் ஈடுபடுகின்றனர். பானை ஓவியம், கண்ணாடி ஓவியம், பூக்கள் செய்தல், வீணானப் பொருட்களிலிருந்து பயனுள்ள பொருட்கள் செய்தல் ஆகியவை மூலம் தங்களின் ஆக்கத் திறனையும், கற்பனை ஆற்றலையும் வெளிப்படுத்துகின்றனர்.

போட்டிகள் :

பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பட்டிமன்ற விவாதம், ஓவியப் போட்டி, கவிதைப் போட்டி போன்றவையும், விளையாட்டுப் போட்டிகள் பலவும் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படுகின்றது.

 

விழிப்புணர்வு பேரணி :

புவி வெப்பமடைதல் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தவும், புகையிலையின் தீங்கினை உணர்த்தும் கையிலும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. அப்போது பொதுமக்களுக்குத் துண்டு பிரசுரங்கள்

விநியோகிக்கப்பட்டது.

 

துறைசார் சாதனைகள் :

தமிழ்த் துறையைச் சார்ந்த சண்முகவல்லி தூய கிறித்தோபர்

கல்வியியல் கல்லூரியில் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு “சூழல் கேடயம்”

பெற்றாள்.

 

குறைதீர் கற்பித்தல்:

கற்றலில் குறைவுடையோருக்குத் திறன்மிக்க மாணவர்கள் மூலம் குறைதீர் பயிற்சி அளிக்கப்படுகின்றது. இப்பயிற்சி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. ஆண்டு இறுதித் தேர்வில் மாணவர்களின் முழுமையான தேர்ச்சிக்கு இம்முறை வழிகோலுகிறது.

 

விருந்தினர் உரை:

தமிழ்த்துறையில் அனுபவம் மிக்க பேராசிரியர்களால் கலைத்திட்டம் தொடர்பான தலைப்பில் அமைந்த கருத்துக்கள் சிறந்த முறையில் விளக்கப்படுகின்றது. இதனை மாணவர்கள்

ஆர்வமுடன் கவனித்தும், பயன் பெற்றும் வருகின்றனர்.

 

விரிவுரையாளர் மேம்பாடு:

வருடந்தோறும் பல்வேறு கல்லூரிகளில் நடைபெறும் பயிலரங்குகளிலும், கருத்தரங்குகளிலும் பங்கு பெற்று பல்வேறு கல்விசார் தகவல்களை அறிந்து கொள்ள முடிகின்றது.

 

வ.எண்

பங்கேற்பு

1

பயிலரங்கு – 3

2

கருத்தரங்கு – 3

 

கருத்தரங்கில் கட்டுரை படிக்கப்பட்டது-2

 

துறைசார் தனித்தன்மைகள்:

  • பிறமொழிக் கலப்பின்றி தூய தமிழில் பேச மாணவர்களை ஊக்குவித்தல்
  • ஒரு சொல் குறித்த பல பொருளை அறிந்து கொள்வதோடு அதனை வேறுபடுத்திக் காட்டும் வகையில் வாக்கியங்களை அமைக்கச் செய்தல்.
  • கற்பித்தல் மாதிரிகளை மாணவர்களின் ஆக்கத் திறனையும், கற்பனை ஆற்றலையும் வெளிக் கொணரும் வகையில் செய்ய தூண்டுதல்.

 

எதிர்காலத் திட்டம் :

தமிழ் மொழியின் முக்கிய திறன்களான கேட்டல், பேசுதல், எழுதுதல், படித்தல் ஆகியவைகளை மேம்படுத்த பெரிதும் துணையாக இருக்கும் மொழிப்பயிற்றாய்வு கூடமே இத்துறையின் எதிர்கால எதிர்பார்ப்பு. துறை மாணவர்களால் மலர் தயாரித்தல் ஊக்குவிக்கப்படுகின்றது.